Tuesday 10 March 2015

அம்மா!

நெனச்சாலே இனிக்குதாத்தா.. 
நெஞ்சம் கனக்குதாத்தா!

சில்லுப்போன சிமெண்டுத்தர 
சிட்டுப்போல ஓட்டுவீடு...
பழய பாய் விரிச்சு... 
பஞ்சுப்போன தலகானி வச்சு...
அந்த ஆளுவீட்டுக்குள்ள... 
காத்தாடி கூட இல்ல...
அண்ணன்தம்பி அக்காதங்கை 
அன்போடு ஒறங்குவோமே ஆத்தா உன் கத கேட்டு...!

நெனச்சாலே இனிக்குதாத்தா.. 
நெஞ்சம் கனக்குது ஆத்தா!

காலையில கண்முழிச்சு
காட்டுக்குள்ள கடம முடிச்சு 
பல்லுகூட விளக்காம 
வரக்காபி குடிச்சுப்புட்டு...
பள்ளிக்கூடம் போறபோது 
நான் பைக்கட்ட மறந்தாலும் 
சத்துணவு சாப்பிட 
தட்டுவக்க மறக்கமாட்டே...

நெனச்சாலே இனிக்குதாத்தா.. 
நெஞ்சம் கனக்குது ஆத்தா!

ஒரு ஓலக்கு அரிசிபோட்டு 
உலவச்சு சொறுபோட்டு 
புள்ளங்க நாங்க சாப்பிட்டு
மிச்சமிருந்தா சாப்பிடுவே...
இல்லையினா சாப்பிட்டேன்னுவே...

நெனச்சாலே இனிக்குதாத்தா.. 
நெஞ்சம் கனக்குது ஆத்தா!

கயித்த கட்டி காரு ஓட்டி 
பூம் பூம் சத்தம்போட்டு...
கயித்துக்குள்ள ஒங்கள 
காரேற கூப்பிட்டு...
தம்பி தங்கை கூட்டிக்கிட்டு 
ஊரெல்லாம் சுத்திவந்தேன்...

நெனச்சாலே இனிக்குதாத்தா.. 
நெஞ்சம் கனக்குது ஆத்தா!

இத்தன போல் எத்தனையோ 
இருக்குதாத்தா எடுத்த்சொல்ல...

முறுக்குமீச வீரப்பேச்சு... 
உள்ளுக்குள்ள ஈர மனசு!
என்ன பெத்த ஐயன் பத்தி 
எடுத்து சொல்ல இந்த ஜென்மம் 
போதாது போதாது... !

அம்மன் கோயில் போனாக்க 
ஆத்தா ஒன் மொகந்தான் !
ஐயன் கோவில் போனாக்க 
அப்பன் அவர் முகந்தான்..!
நான் கும்பிடுற சாமியெல்லாம் 
ஆத்தா ஐயா நீங்க தானே...
நான் தொட்டதெல்லாம் 
வெற்றிபெறும் காரணமும் அதுதான...!

இப்ப படுக்க பஞ்சு மெத்த... 
மாடிவீடு ஏசி ரூமு...
இருக்கு இப்ப பல காரு... 
இல்லையந்த சந்தோசம்!!!

மறுபிறவி வேணுமாத்தா 
உன் மடியில் பிறப்பதற்கு...
மறுபிறவி வேணுமாத்தா 
ஐயன் வழி வருவதற்கு...!!!

பணக்கார வாழ்க்க வேணாம்... பந்தம்பாசம் கொறஞ்சு போகும்!!!
பரபரப்பு நகரம் வேணாம்... பட்டிக்காடு அது போதும்!!!
மாடிவீடு எதுவும் வேணாம்... ஓட்டுவீடு ஒன்னு போதும்!!!
மறுபிறவி எடுப்போம் ஆத்தா உன் மடியில் பிறப்பதற்கு...!!!!!!

மக்கள் மன்றம்.

0 comments:

Post a Comment